கீதம்
கீதம் 1
காமாக்ஷி லோக ஸாக்ஷிணீ
கா(மா)ரி மனோ-ஹாரிணீ
காமாக்ஷி கஞ்சி காமாக்ஷி
பாஹி மாம் பாஹி மாம் (ப3ங்கா3ரு) பாஹி
பதம் பிரித்தல் - பொருள்
கீதம்
கீதம் 1
காமாக்ஷி/ லோக/ ஸாக்ஷிணீ/
காமாட்சீ/ உலக/ சாட்சியே/
காம/-அரி/ மனோ/-ஹாரிணீ/
காமன்/ பகைவன்/ உள்ளம்/ கவர்பவளே/
காமாக்ஷி/ கஞ்சி/ காமாக்ஷி/
காமாட்சீ/ காஞ்சி/ காமாட்சீ/
பாஹி/ மாம்/ பாஹி/ மாம்/ (ப3ங்கா3ரு)/ பாஹி/
காப்பாய்/ என்னை/ காப்பாய்/ என்னை/ (பங்காரு)/ காப்பாய்/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
4 - காம கோடி பீட2 வாஸினீ - காம கோடி பீட2 ஸுவாஸினீ.
Top
மேற்கோள்கள்
2 - அண்ட3ஜ - அண்டத்தில் (முட்டையில்) உதித்தோன் - பிரமன் - 'ஹிரண்ய க3ர்ப4' நோக்கவும்.
3 - மண்ட3ல ஸ்தி2தே லலிதே - மண்டலத்துறைபவள் - ஸ்ரீ சக்கரத்தின் ஒன்பது மண்டலங்கள் - லலிதா ஸஹஸ்ர நாமத்தில் (380), அம்மையின் பெயர் 'பி3ந்து3 மண்ட3ல வாஸினி' - 'பி3ந்து3 மண்ட3லம்'.
4 - காம கோடி பீட2 - லலிதா ஸஹஸ்ர நாமத்தில் (589), அம்மையின் பெயர் 'காம கோடிகா' - 'காம கோடி பீடம்' நோக்கவும்.
4 - ஸுவாஸினீ - லலிதா ஸஹஸ்ர நாமத்தில் (970), அம்மையின் ஓர் பெயர்.
Top
விளக்கம்
1 - மஞ்ஜுள தம நயனே ஹரிணி - பெண்மான் நிகர், அழகு மிகு கண்களினள் - இதனை, இரண்டு அடைமொழிகளாகவும் கொள்ளலாம் - 'மஞ்ஜுள தம நயனே' மற்றும் 'ஹரிணி' என்று. ஆனால், லலிதா மகா திரிபுர சுந்தரியைப் பற்றிய இந்த கீதத்தினில், 'ஹரிணி' என்ற சொல்லுக்கு, பொருத்தமான பொருள் ஏதும் கொள்ள இயலாது. எனவே, இதனை, ஒரே அடைமொழியாக ஏற்கப்பட்டது. ஆயினும், அம்மைக்கு, 'நாராயணி' (நாராயணனின் உருவினள்) என்றோர் பெயர் இருப்பதனைப்போல், 'ஹரிணி' (ஹரியின் உருவினள்) என்று சியாமா சாஸ்த்திரிகள் பயன்படுத்தியுள்ளாரோ என்று விளங்கவில்லை.
2 - அண்ட3ஜ ஹரி கி3ரீஸ1 மண்டி3தே - புத்தகங்களில், 'மண்டி3தே' என்ற சொல்லினை 'போற்றப்பெற்றவள்' என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஆனால், இச்சொல்லுக்கு, 'அணிபவள்' என்றுதான் பொருள். காமாட்சி அம்மை, லலிதா மகா திரிபுர சுந்தரி என்ற உருவத்தினில், மும்மூர்த்திகளின் தொழில்களான, படைத்தல், காத்தல், அழித்தல், ஆகியவற்றினை, தானே இயற்றுதலால், அவள், இந்த மும்மூர்த்திகளை அணிகின்றாள் என்று பொருள் கொள்வது தவறாகாது என்று நான் நம்புகின்றேன்.
காமன் பகைவன் - சிவன்
மலையீசன் - சிவன்
Top